Published : 07 Dec 2018 09:50 AM
Last Updated : 07 Dec 2018 09:50 AM

காற்று மாசைக் குறைத்த விரைவு நெடுஞ்சாலை

எந்த ஒரு திட்டத்தை உருவாக்கும்போதும், சுற்றுச்சூழல் தொடர்பான அக்கறையுடன் இருந்தால் அது நிச்சயம் பலனளிக்கும் என்பதை ஹரியாணாவின் ஐந்து நகரங்களை இணைக்கும் குண்ட்லி-மனேசார்-பல்வால் (கேஎம்பி) விரைவுநெடுஞ்சாலை நிரூபித்திருக்கிறது. டெல்லிக்குள் நுழையாமலேயே சுற்றுப் பாதையில் வாகனங்கள் செல்ல முடியும் என்பதால், இது டெல்லியின் காற்று மாசைக் கணிசமாகக் குறைந்திருக்கிறது. டெல்லிக்குள் வரும் கனரக வாகனங்களை சுற்றுவட்டச் சாலை வழியாக திருப்பிவிட்டால் அவை ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களுக்கு நேரடியாகச் சென்றுவிடும்; டெல்லியில் வாகன நெரிசலும் காற்று மாசும் குறையும் என்று சுற்றுச்சூழல் மாசு தடுப்பு, கட்டுப்பாட்டு ஆணையம்

2003-ல் சுட்டிக்காட்டியிருந்தது. இதை மனதில் கொண்டே இந்த விரைவு நெடுஞ்சாலைத் திட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது, கனரக வாகனங்கள் மட்டுமல்லாது, லேசுரக சரக்கு வாகனங்கள், கார்கள், இரு சக்கர வாகனங்களும் புதிய பாதையை அதிகம் பயன்படுத்துகின்றன.  ஹரியாணாவின் குருகிராமுக்குள் கேர்க்கி தௌலா சுங்கச் சாவடி வழியாக அன்றாடம் வரும் வாகனங்களின் எண்ணிக்கையில் 14,000 குறைந்திருக்கிறது. இது நல்ல முயற்சி என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x