Published : 26 Dec 2018 10:19 AM
Last Updated : 26 Dec 2018 10:19 AM
அயோத்தி வழக்கு வரும் ஜனவரி 4-ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே.கவுல் அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது. அப்போது அயோத்தி வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த கருத்தரங்கில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:சபரிமலை வழக்கை உச்ச நீதிமன்றம் விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்கியது. ஆனால் அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கு 70 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 8 ஆண்டுகளாக தேங்கியுள்ளது. அரசமைப்பு சாசனத்தில் ராமர், கிருஷ்ணர், அக்பர் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால் பாபரை பற்றிய குறிப்புகள் கிடையாது. பாபரை நாம் ஏன் வணங்க வேண்டும். அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கை உச்ச நீதிமன்றம் விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT