Published : 29 Dec 2018 07:47 AM
Last Updated : 29 Dec 2018 07:47 AM

சிறார்களுக்கு எதிரான கொடூர பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இது குறித்து சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:

சிறார்களுக்கு எதிரான கொடூர பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இயற்கை பேரிடரின்போது குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாத்திடவும் பாலியல் பலாத்கார நோக்கத்துடன் சிறுமிகளை முன்கூட்டியே பருவம் அடையச் செய்திட அவர்களுக்கு ஹார்மோன் செலுத்தப்படுவதை தடுக்கவும் மற்றொரு திருத்தம் மேற்கொள்ளப்படும். சிறார் நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்தாலும் அழிக்காமல் சேமித்து வைத்திருந்தாலும் கடும் அபராதம் விதிக்கப்படும். இதற்கு மற்றொரு திருத்தம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

பாலியல் குற்றங்களால் சிறுமிகள் மட்டுமின்றி சிறுவர்களும் பாதிக்கப்படுவதால், போக்சோ சட்டத்தை பாலியல் சமநிலை கொண்டதாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டு வந்தது. இதன் அடிப்படையில் இத்திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x