Published : 29 Nov 2018 08:56 AM
Last Updated : 29 Nov 2018 08:56 AM

6 பேர் பலியானதில் ஒப்பந்ததாரர் மீது வழக்கு

மகாராஷ்டிரா மாநிலம் வார்தா மாவட்டத்தில் பல்கான் நகரில் ராணுவத்துக்கு சொந்தமான வெடிபொருட்கள் சேமித்து வைக் கும் கிடங்கு உள்ளது. இதன் அரு கில் உள்ள மைதானத்தில் கடந்த 20-ம் தேதி வெடிபொருட்களை தொழிலாளர்கள் இறக்கிவைக் கும் பணியின்போது ஒரு பெட்டி யில் இருந்த வெடிபொருட்கள் வெடித்துச் சிதறியதில் 6 பேர் இறந்தனர்.

சண்டக் கட்டுமான நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் சங் கர் சண்டக் மீது டியோரி காவல் நிலையத்தில் போலீஸார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். சங்கர் சண்டக் தலைமறைவாக உள்ளார். விபத்து தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x