Published : 06 Nov 2018 12:08 PM
Last Updated : 06 Nov 2018 12:08 PM
கர்நாடக மக்களவை இடைத்தேர்தலில் 4 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும், பா.ஜ.க. 1 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
கர்நாடகாவில் பெல்லாரி, ஷிமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவை தொகுதிகளுக்கும், ராம்நகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 3ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் ஆளும் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதளக் கூட்டணி 2 மக்களவைத் தொகுதிகளிலும் 2 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஷிமோகா மக்களவைத் தொகுதியில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
இந்த தேர்தலில் நக்சல்கள் அச்சுறுத்தலை அடுத்து பாதுகாப்பு பணிக்காக சுமார் 20 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில், பெல்லாரி, ஷிமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவை தொகுதிகள் மற்றும் ராம்நகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், காங்கிரஸ் கட்சியானது ஜமகண்டி மற்றும் பெல்லாரி ஆகிய 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மதசார்பற்ற ஜனதாதள கட்சி ராம்நகர் மற்றும் மாண்டியா ஆகிய 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாரதீய ஜனதா ஷிமோகா தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.
14ம் சுற்று வாக்கு எண்ணிக்கைகளின் படி ஷிமோகாவில் பாஜக வேட்பாளர் ராகவேந்திரா 48,311 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார், இவருக்கு அடுத்த நிலையில் மஜதவின் மது பங்காரப்பா உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT