Last Updated : 05 Nov, 2018 02:01 PM

 

Published : 05 Nov 2018 02:01 PM
Last Updated : 05 Nov 2018 02:01 PM

ஒடிசா வனப்பகுதியில் ஒரு பெண் உட்பட 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ஒடிசா வனப்பகுதியில் இன்று அதிகாலை ஒரு பெண் மாவோயிஸ்ட் உட்பட 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாநிலக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஒடிசா மாநில காவல்துறைத் தலைவர் ஆர்.பி.ஷர்மா தெரிவிக்கையில், ''இன்று காலை சிறப்பு அதிரடிப் படையினரோடு சேர்ந்த மல்காங்கிரி மாவட்டத்தில் உள்ள பாப்லர் வனப்பகுதியில் ஒரு கூட்டு அதிரடி நடவடிக்கையை நடத்தினோம். இதில் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இதில் ஒரு பெண் மாவோயிஸ்ட் உட்பட 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து இரு ஐஎன்எஸ்ஏஸ் துப்பாக்கிகள், ஒரு எஸ்எல்ஆர் துப்பாக்கி, ஒரு 303 ரக துப்பாக்கி மற்றும் ஒரு கையெறி குண்டு ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன'' என்று அவர் தெரிவித்தார்.

கூடுதல் காவல்துறை தலைவர் (அதிரடி நடவடிக்கைகள்) ஆர்.பி.கோச்சே இதுகுறித்து கூறுகையில், ''சிறப்பு அதிரடிப்படையின் இரு குழுக்கள் இணைந்து மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள காட்டுப் பகுதிகளில் ஒரு கூட்டு அதிரடி நடவடிக்கை நேற்றிலிருந்து தொடங்கியது.

அதன் ஒரு பகுதிதான் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டை. இத்துப்பாக்கிச் சண்டையின்போது தப்பிச் சென்ற மாவோயிஸ்டுகள் சென்ற பாதைகள் குறித்து கண்காணிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளோம்'' என்றார்.

ராண்டேவும் சுட்டுக்கொலை?

மாவோயிஸ்ட் தலைவர் ராண்டேவ், அங்கு இருந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் இறந்த கிளர்ச்சியாளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x