Published : 16 Nov 2018 03:57 PM
Last Updated : 16 Nov 2018 03:57 PM
காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் உள்ளூர் நபர் ஒருவரைக் கடத்திச் சென்ற தீவிரவாதிகள், அவரைக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ''தெற்கு காஷ்மீரின் சோபியன் பகுதியைச் சேர்ந்தவர் நதீம் மன்சூர். அவரை மர்ம நபர்கள் வியாழக்கிழமை அன்று கடத்திச் சென்றனர். குண்டுகள் துளைத்த நிலையில் நசூரின் உடல் இன்று (வெள்ளிக்கிழமை) புல்வாமா மாவட்டத்தில் உள்ள நிக்லோரா பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
கொலைக்கான காரணம் தனிப்பட்ட முன்விரோதமா அல்லது தீவிரவாதச் செயலா என்று தெரியவில்லை.
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்'' என்றார். இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினை காரணமாக காஷ்மீரில் நிலவும் நிலையற்ற தன்மையால் உள்ளூர் பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT