Published : 11 Nov 2018 05:28 PM
Last Updated : 11 Nov 2018 05:28 PM

குடிபோதையில் வேலைக்கு வந்த பைலட்: மாற்று பைலட் மூலம் விமானம் இயக்கம்

டெல்லியில் இருந்து லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானத்தை இயக்கும் பைலட் குடிபோதை சோதனையில் சிக்கினார். இதையடுத்த அவருக்கு பதிலாக மாற்று பைலட் மூலம் அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.

டெல்லியில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் பிற்பகல் 2:45 மணிக்கு புறப்பட வேண்டும். விமானத்தை பைலட் அரவிந்த் கத்பாலியா ஓட்ட வேண்டும். விமானத்தை இயக்க செல்லும் முன்பு வழக்கமான மதுபோதை சோதனை நடத்தப்பட்டது.

அவர் மதுபானம் குடித்து இருந்தது சோதனையில் தெரிய வந்தது. 2வது முறையாக அவருக்கு சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர் குடித்து இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக கீழே இறக்கப்பட்டார்.

மாற்று ஏற்படாக வேறு ஒரு பைலட் நியமிக்கப்பட்டார். அவர் சக பைலட்டுடன் சேர்ந்து விமானத்தில் லண்டன் புறப்பட்டுச் சென்றார். இதனால் லண்டன் விமானம் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

அரவிந்த இதற்கு முன்பு 2017-ம் ஆண்டும் இதேபோன்ற சர்ச்சையில் சிக்கினார். டெல்லியில் இருந்து பெங்களூரு செல்லும் விமானத்தை இயக்கிய அவர் மதுபான குடித்துள்ளாரா என்ற சோதனையை செய்யாமலேயே புறப்பட்டுச் சென்றார். இதுகுறித்து பைலட்டுகள் சங்கம் அளித்த புகாரின் பேரில் அவர் மீது அப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x