Published : 16 Nov 2018 08:29 AM
Last Updated : 16 Nov 2018 08:29 AM
பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா சில மாதங்களுக்கு முன் நடந்த இசை நிகழ்ச்சியில் கர்நாடக இசையில் கிறிஸ்துவ பாடல்களைப் பாடிய தற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கு பதிலளித்த டி.எம்.கிருஷ்ணா, ‘ஏசு கிறிஸ்து, அல்லா குறித்த பாடல்களை கர்நாடக இசையில் மாதந்தோறும் வெளி யிடுவேன்’ என்று தெரிவித்தார். இதற்காக வலதுசாரி அமைப்புகள் அவரை கடுமையாக விமர்சித்தன. இந்நிலையில், ‘பூங்காவில் நடனம் மற்றும் இசை’ என்ற பெயரில் டெல்லியில் சனிக்கிழமை (நாளை) இசை நிகழ்ச்சி ஒன்றில் டி.எம்.கிருஷ்ணா பாடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மற்றும் ஸ்பிக் மேக்கே அமைப்பு இணைந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.
இதற்கு வலதுசாரி அமைப்பு கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந் நிலையில் வலதுசாரி அமைப்பு களின் கடும் எதிர்ப்பால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாயின. இதுகுறித்து விமான நிலையங் கள் ஆணையம் கூறும்போது, “சில அவசர பணிகள் காரண மாக இசை நிகழ்ச்சி ஒத்திவைக் கப்படுவதாகவும் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT