சபரிமலையில் விதிகளை மீறியதாக ஐயப்ப பக்தர்கள் 60 பேர் கைது

சபரிமலையில் விதிகளை மீறியதாக ஐயப்ப பக்தர்கள் 60 பேர் கைது
Updated on
1 min read

சபரிமலையில் விதிகளை மீறிய தாக கூறி ஐயப்ப பக்தர்கள் 60 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயி லுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த அக்டோபர் மாதம் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக் கப்பட்டபோது, அங்கு சில பெண்கள் செல்ல முற்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராள மான ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, சபரிமலை மற்றும் அதன் சுற்றுப் பகுதி களில் 144 தடை உத்தரவு அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதனிடையே, மகர - மண்டல விளக்கு பூஜைக்காக கோயில் நடை தற்போது திறக்கப்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருகின்றனர்.

அவ்வாறு வரும் பக்தர்கள், தடை உத்தரவு இருக்கும் பகுதிகளில் ஒன்று கூடும்பட்சத்தில் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுகின்றனர். அதன்படி, இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கைது செய்யப்பட்டுள் ளனர். இதற்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், சபரிமலை கோயில் சன்னிதானத்தின் அருகே ஐயப்ப பக்தி கோஷம் எழுப்பியதாக கூறி 60 பேரை கேரள போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in