Published : 26 Aug 2014 10:40 AM
Last Updated : 26 Aug 2014 10:40 AM

ஆவணங்கள் இன்றி பயணம் செய்த 33 வங்கதேசத்தவர் கைது

எந்தவித ஆவணங்களுமின்றி ரயிலில் பயணம் செய்த வங்க தேசத்தை சேர்ந்த 33 பேரை திருப்பதி ரயில்வே போலீஸார் திங்கள் கிழமை கைது செய்தனர்.

கொல்கத்தாவில் இருந்து பெங்களூருக்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த வங்க தேசத்தை சேர்ந்த 33 பயணிகள் மீது சந்தேகம் அடைந்த சக பயணி கள் கொடுத்த தகவலின் பேரில், திருப்பதி அடுத்துள்ள ரேணி குண்டா ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். இதில் தகுந்த ஆவணங்கள் இல்லாத 33 வங்க தேசத்தினர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் பெங்களூர் செல்ல முயன்றதாக விசாரணையில் தெரியவந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x