Published : 25 Nov 2018 11:09 AM
Last Updated : 25 Nov 2018 11:09 AM

ராஜஸ்தானில் இன்று மோடி பிரச்சாரம்

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

இத்தேர்தலில், பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், ஆட்சியை தக்க வைக்கும் கட்டாயத்தில் பாஜகவும் தீவிரமாக களப் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தேர்தல் தேதி நெருங்குவதால் அம்மாநிலத்தில் இரண்டு கட்சிகளையும் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தானில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். அல்வர் நகரில் பிரச்சாரம் மேற்கொள்ளும் அவர், பில்வாரா, டங்கர்பூர், கோடா ஆகிய பகுதிகளில் நாளை பிரச்சாரம் செய்கிறார்.

பிரதமர் மோடியை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் அடுத்தடுத்த தினங்களில் ராஜஸ்தானில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x