‘‘சபரிமலை விவகாரத்தில் தேவையான நேரத்தில் தலையிடுவோம்’’ - மத்திய அமைச்சர் உறுதி

‘‘சபரிமலை விவகாரத்தில் தேவையான நேரத்தில் தலையிடுவோம்’’ - மத்திய அமைச்சர் உறுதி
Updated on
1 min read

சபரிமலை விவகாரத்தில் சட்டம் கொண்டு வர வேண்டியது கேரள அரசு தான், தேவையான நேரத்தில் மத்திய அரசு தலையிடும் என மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார். 

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல 10 வயது முதல் 50 வயது வரையி லான பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டபோது சில இளம்பெண்கள் கோயிலுக்குச் செல்ல முயன்றனர். இந்து அமைப் பினரின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த 22-ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டது.

ஒரு பெண் கூட ஐயப்பனை தரிசிக்கவில்லை. இந்தப் பின்னணியில் சபரிமலை தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை ஜனவரி 22-ம் தேதி முதல் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவதாக தெரிவித்துள்ளது. அதேசமயம், முந்தைய தீர்ப்பு தற்போது அமலில் இருப்பதால் அதற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது. எனவே இந்த விவகாரத்துக்கு தீர்வு காண சட்டம் கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியதாவது:

சபரிமலை விவகாரத்தில் மக்களின் உணர்வு மதிக்கப்பட வேண்டும். புனித தலமான அதன் பாரம்பரியம், பண்பாடு காக்கப்பட வேண்டும். சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பால் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

சபரிமலை விவகாரத்தில் பக்தர்களின் எண்ணத்தை செயல்படுத்த சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து கேரள அரசு தான் முடிவு செய்ய வேண்டும் தேவை ஏற்பட்டால், தேவைப்படும் நேரத்தில் மத்திய அரசு தலையிடும்’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in