Published : 07 Apr 2014 12:00 AM
Last Updated : 07 Apr 2014 12:00 AM

மும்பை கடற்படை கப்பலில் தீ விபத்து

மும்பை கடற்படைத் தளத்தில் நின்றிருந்த ஐ.என்.எஸ். மாதுங்கா கப்பலில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பிடித்தது.

கப்பலில் தீப்பிடித்ததை அங்கு பணியில் இருந்த வீரர் கண்டுபிடித்து கடற்படைத் தள தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக தீயணைப்பு வீரர்கள், கப்பலில் பணியாற்றும் வீரர்கள் இணைந்து போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் உயிரிழப்போ, காயமோ, பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று கடற்படை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையைச் சேர்ந்த இழுவைக் கப்பலான ஐ.என்.எஸ். மாதுங்கா, இரண்டு மிகப் பெரிய கப்பல்களை இழுக்கும் திறன் கொண்டதாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x