Published : 03 Nov 2018 11:55 AM
Last Updated : 03 Nov 2018 11:55 AM
டெல்லி, பவானா பகுதியில்ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆசிரியையின் கணவர், அவரின் காதலி மற்றும் அவரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியை, தனது கணவர் மாடல் அழகி ஒருவருடன் சட்ட விரோதமாகப் பழகிவந்ததைக் கண்டித்ததால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அக்டோபர் 29-ம் தேதி டெல்லி, பவானா பகுதியில் பட்டப்பகலில் ஆசிரியை சுனிதா (38) மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதுதொடர்பாக விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர், சுனிதாவின் கணவர் மஞ்சித், மஞ்சித்தின் காதலியும் மாடலுமான ஏஞ்சல் குப்தா(26) மற்றும் ஏஞ்சல் குப்தாவின் தந்தை ராஜீவ் குப்தா ஆகியோரைக் கைது செய்தனர். மஞ்சித், ஏஞ்சலுடன் சட்ட விரோதமாகப் பழகியதை சுனிதா கண்டித்ததாகவும் அதனால் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகவும் ஏஞ்சல் தெரிவித்துள்ளார்.
சுனிதா மீது கூலிப்படையினர் இருவரை ஏவிவிட்டுக் கொலை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொலை செய்யப்பட்ட ஆசிரியை சுனிதாவுக்கு 16 வயதில் மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT