Published : 22 Nov 2018 10:52 AM
Last Updated : 22 Nov 2018 10:52 AM
பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் ஜனநாயகத்தை பலவீனப்படுத்த நன்கு திட்டமிடப் பட்ட முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து ம.பி.யின் இந் தூரில் நேற்று அவர் கூறியதாவது:
நாடாளுமன்றம், சிபிஐ போன்ற அமைப்புகளின் நம்பகத்தன்மை திட்டமிட்டு சீர்குலைக்கப்பட்டு வருவதை நாடு பார்த்து வருகிறது. ஜனநாயகத்தை பலவீனப்படுத்த நன்கு திட்டமிடப்பட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டத்தின் ஆட்சி என்பது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தற்போதைய சூழ்நிலை மாறா விட்டால் இந்த தலைமுறையை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை யானது திட்டமிடப்பட்ட மற்றும் சட்டப்பூர்வ கொள்ளையாகும். மக்களை அழிவுப்பாதையில் இந்த அரசு கொண்டு செல்கிறது. இதிலிருந்து விடுபடுவது மக்கள் கையில்தான் உள்ளது.
பிரதமர் பதவியை நரேந்திர மோடி தவறாகப் பயன்படுத்து கிறார். பிரதமர் பதவிக்கான அதிகாரத்தை அரசியல் எதிரிகள் மீது துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT