Published : 09 Nov 2018 12:06 PM
Last Updated : 09 Nov 2018 12:06 PM

பாலியல் வன்முறை சர்ச்சை: பாஜக நிர்வாகி நீக்கம்

பாலியல் வன்முறை சர்ச்சை காரணமாக உத்தரகண்ட் மாநில பாஜக நிர்வாகி அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தி தினசரியான அமர் உஜாலா பத்திரிகையில், டேராடூனில் வசிக்கும் பாஜக பெண் அமைப்பாளர் ஒருவர் சஞ்சய் குமார் மீது பாலியல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்தார். உத்தரகண்ட் மாநில பாஜக பொதுச்செயலாளராக இருக்கும் சஞ்சய், ஐந்து வருடங்களாக தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்ததாகத் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து பாஜக தலைவர்களிடம் பலமுறை புகார் கூறியதாகவும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்ததாக செய்தி வெளியானது. இது உத்தரகண்டில் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அஜய் பட், ''பாலியல் துன்புறுத்தல் புகார்களை அடுத்து, எழுத்து பூர்வமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தார் சஞ்சய். அதில் தன்னை பதவியில் இருந்து நீக்கிவிடுமாறு அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவரின் வேண்டுகோள் ஏற்கப்பட்டு, அவர் பொதுச் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x