Published : 06 Nov 2018 08:47 AM
Last Updated : 06 Nov 2018 08:47 AM

களிமண் விளக்கு சந்தையில் மண்ணைப் போடும் சீனத் தயாரிப்புகள்

அசாமில் விளக்கு தயாரிப்பில் ஈடுபட்டுவரும் உள்ளூர் மக்கள் மலிவான சீனத் தயாரிப்பு விளக்குகளின் வரவால் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள். சீன விளக்குகளுடன் வங்கதேசத்திலிருந்து தயாராகிவரும் விளக்குகளும் சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள் உள்ளூர் மக்கள். “துப்ரி மாவட்டத்தின் வழியாக வங்கதேசத் தயாரிப்பு விளக்குகள் கொண்டுவரப்படுகின்றன. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதேயில்லை” என்கிறார்கள். களிமண் விளக்குகளைத் தயாரிக்கும் உள்ளூர்த் தொழிலாளர்கள். “பல தலைமுறைகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுவரும் எங்களுக்கு அரசு எவ்வித உதவியும் செய்வதில்லை. போதாக்குறைக்கு, களிமண்ணால் தயாரிக்கப்படும் பாரம்பரிய விளக்குகளில் பயன்படுத்தப்படும் நெய், கடுகு எண்ணெய் ஆகியவற்றின் விலையும் உயர்ந்துவருவதால், எங்களுக்குக் கூடுதல் சவால் ஏற்பட்டிருக்கிறது” என்கிறார்கள் அவர்கள். அதேசமயம், மலிவான சீன விளக்குகளைவிடவும் தரமான முறையில் தயாரிக்கப்படும் உள்ளூர் மண் விளக்குகளைத் தேடி வாங்கிச்செல்பவர்களும் உண்டு. இந்த தீபாவளிக்கு அந்த மாதிரியான பாரம்பரிய வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருக்கின்றன அசாம் விளக்குகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x