Published : 01 Nov 2018 05:19 PM
Last Updated : 01 Nov 2018 05:19 PM

தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் தெலுங்குதேசம்: தொகுதி பங்கீடு அறிவிப்பு

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸூடனான கூட்டணியை தெலுங்குதேசம் கட்சி இறுதி செய்துள்ளது. தொகுதி பங்கீடும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் டிசம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமதி, பாஜக, காங்கிரஸ் தனித்து போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் காங்கிரஸுடன் தெலுங்குதேசம் கரம் கோர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று மாலை சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி பேசினார். இந்த சந்திப்புக்கு சற்று முன்னதாக, தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் - தெலுங்குதேசம் கூட்டணி இறுதி செய்யப்பட்டது.

தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் தலைவர் உத்தம் குமார் ரெட்டி இதனை அதிகாரபூர்வமாக இன்று அறிவித்தார். அதன்படி மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 95 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. தெலுங்கு தேசம் 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தெலங்கான ஜன சமிதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கூட்டணியில் தெலுங்கு தேசம் இணைந்துள்ளதால் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமதி கடும் போட்டியை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x