Published : 25 Nov 2018 11:14 AM
Last Updated : 25 Nov 2018 11:14 AM

சத்தீஸ்கரில் 4 நக்சல்கள் கைது

சத்தீஸ்கரில் 2 பெண்கள் உட்பட 4 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டம் நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். பான்ஸி பகுதியில் போலீஸார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மீனா, மங்களா, பீமா குன்ஞம் ஆகிய நக்சல் தீவிர வாதிகள் கைது செய்யப்பட்டனர். இதேபோல பர்சூர் பகுதியில் தாஸ்மன் என்ற நக்சல் தீவிரவாதி கைது செய்யப்பட்டார்.

இதில் மீனாவின் தலைக்கு ரூ.3 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. பஸ்கள் எரிப்பு, தண்டவாள தகர்ப்பு உள்ளிட்ட பல்வேறு சமூகவிரோத செயல்களில் 4 தீவிரவாதிகளுக்கும் தொடர் புள்ளது என்று தண்டேவாடா போலீஸ் எஸ்.பி. அபிஷேக் பல்லவா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x