Published : 29 Nov 2018 12:46 PM
Last Updated : 29 Nov 2018 12:46 PM
டெல்லி போலீஸ் தலைமை அலுவலக மாடியில் இருந்து குதித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி காவல்துறையில் உதவி ஆணையாளராக பணியாற்றி வந்தவர் பிரேம் பல்லப் குமார் (வயது 55). சமீபகாலமாக மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி இருந்ததாக கூறப்படுகிறது. உடல்நிலை பாதிப்பு மற்றும் குடும்ப பிரச்சினையால் அவர் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி இருந்ததாக கூறப்படுகிறது.
டெல்லி காவல்துறை தலைமை அலுவலகத்தில் அலுவல் சார்ந்த பணிகளை தற்போது அவர் கவனித்து வந்தார். இந்தநிலையில் இன்று காலை பணிக்கு வந்த சிறிது நேரத்தில் காலை 10:00 மணியளவில் அலுவலகத்தின் மாடியில் இருந்து கீழே குதித்தார்.
இதில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவரது தற்கொலை குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT