Published : 28 Nov 2018 10:07 AM
Last Updated : 28 Nov 2018 10:07 AM
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு டிசம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை கட்சியின் மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களுமான அருண் ஜேட்லி, பிரகாஷ் ஜவடேகர், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் நேற்று வெளியிட்டனர். 2013-ல் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை 95 சதவீதம் நிறைவேற்றியிருப்பதாக பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை குறித்து வசுந்தரா ராஜே கூறுகையில், “மக்களின் வளர்ச்சிக்காகவே பாஜக அரசு பாடுபட்டு வருகிறது. கடந்த தேர்தல் அறிக்கையில் 665 வாக்குறுதிகளை நாங்கள் கொடுத்தோம். இதில் 630 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம்.
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்குவோம். மேலும் ஆண்டுதோறும் 30 ஆயிரம் அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 21 வயதுக்கு மேற்பட்ட வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு மாதம்தோறும் ரூ.5 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும்” என்றார். பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT