Last Updated : 25 Oct, 2018 07:01 PM

 

Published : 25 Oct 2018 07:01 PM
Last Updated : 25 Oct 2018 07:01 PM

சிறையில் கன்னட மொழி கற்றுக் கொள்ளும் சசிகலா

முன்னாள் அஇஅதிமுக பொதுச் செயலாளரான வி.கே.சசிகலா, பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் உள்ள பள்ளியில் கன்னட மொழி கற்றுக் கொண்டு வருவதாக சிறை அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

“சசிகலா இப்போதைக்கு கன்னட எழுத்துக்களை பயின்றுள்லார், இன்னும் உயர்மட்ட கன்னட மொழியைக் கற்க அவர் விண்ணப்பிக்கலாம். இப்போதைக்கு கொஞ்சம் கன்னட மொழியைக் கற்றுள்ளார். இப்போதைக்கு அவரால் கொஞ்சம் கன்னடம் பேச முடியும்” என்றார் சிறை அதிகாரி.

இதற்கிடையே மூத்த பெங்களூரு பல்கலைக் கழக அதிகாரியான டாக்டர் பி.சி.மைலார்ப்பா என்பவர் கூறும்போது, “உயர்மட்ட கன்னட மொழியைக் கற்றுக் கொள்ள சசிகலாவிடமிருந்து சிறையிலிருந்து விண்ணப்பம் வரப்பெற்றோம். இது ஒரு சர்டிபிகேட் கோர்ஸ் ஆகும். ஒராண்டுக்கான படிப்பாகும் இது. இந்தப் பாடம் விரைவில் தொடங்கவுள்ளத், கோர்ஸ் முடிந்த பிறகு தேர்வுகள் நடைபெறும்” என்றார்,

இதற்கான வகுப்புகள் சிறை வளாகத்திலேயே நடைபெறும் என்று சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x