Published : 31 Oct 2018 08:34 AM
Last Updated : 31 Oct 2018 08:34 AM
சிபிஐ சிறப்பு இயக்குநர் அஸ்தானா வுக்கு எதிராக சாட்சியம் அளித்த தொழிலதிபர் சதீஷ் சனாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சதிஷ் சனா மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
இவ்வழக்கை நீர்த்துப் போகச் செய்ய சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு ரூ.2 கோடி பணம் கைமாறியதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் சனா, அரசு தரப்பு சாட்சியாக மாறினார். அஸ்தானாவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கைமாறியது என்று நீதிமன்றத்தில் அவர் சாட்சியம் அளித்தார். அதன்பேரில் அஸ்தானா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிபிஐ டிஎஸ்பி தேவேந்திர குமார் கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். சிபிஐ தற்காலிக இயக்குநராக நாகேஸ்வர் ராவ் பதவியேற்றுள்ளார்.
சிபிஐ தலைமை மாறியிருப்ப தால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தொழிலதிபர் சதீஷ் சனா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் லலித், கே.எம்.ஜோசப் அமர்வு, சதீஷ் சனாவுக்கு போலீஸ் பாது காப்பு வழங்க ஹைதராபாத் போலீ ஸாருக்கு உத்தரவிட்டனர்.
சிபிஐ அதிகாரி மனு
ராகேஷ் அஸ்தானா மீதான ஊழல் புகாரை விசாரித்த சிபிஐ துணை இயக்குநர் ஏ.கே.பாஸி அந்தமானுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அஸ்தானா வழக்கை விசாரித்த மேலும் 12 சிபிஐ அதிகாரிகளும் மாற்றப்பட் டுள்ளனர்.
இந்நிலையில் பணியிட மாற்றத்தை எதிர்த்து ஏ.கே.பாஸி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் இதனை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி மறுத்துவிட்டார். எனினும் இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படும் என்று தெரிகிறது.
டிஎஸ்பி-க்கு காவல்
அஸ்தானா மீதான லஞ்ச வழக் கில் கைது செய்யப்பட்ட டிஎஸ்பி தேவேந்திர குமார், இடைத்தரகர் மனோஜ் பிரசாத்திடம் கடந்த 7 நாட்களாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து இருவரும் நேற்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரை யும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சந்தோஷ் சிநேகி மான் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT