Published : 30 Oct 2018 11:54 AM
Last Updated : 30 Oct 2018 11:54 AM

சரமாரித் தாக்குதலுக்கு ஆளான ஓலா ஓட்டுநர்: பந்த்தின் போது பணியாற்றியதால் போராட்டக்காரர்கள் ஆவேசம்

மும்பையில் செயலிகளைச் சார்ந்து பணியாற்றும் கார் ஓட்டுநர்கள் நடத்தி வரும் பந்த்தின்போது பணியாற்றிய ஓலா ஓட்டுநரைப் போராட்டக்காரர்கள் சரமாரியாகத் தாக்கினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவில் போராட்டக்காரர்கள் மோசமான வார்த்தைகளால் ஓலா ஓட்டுநரைச் சாடுகின்றனர். ஆடைகளை கழற்றச் சொல்லி ஆணையிடுகின்றனர். இதைத் தொடர்ந்து மும்பை காவல்துறை, போராட்டக்காரர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளது.

கடந்த அக்டோபர் 22-ம் தேதி முதல் மும்பையில் சுமார் 40,000 ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும் எனவும் மேம்பட்ட பணிச் சூழல் வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். நேற்று (திங்கட்கிழமை) உபெர் நிறுவனத்தின் குர்லா அலுவலகத்தில் இருந்து அந்தேரியில் உள்ள ஓலா அலுவலகம் வரை கருப்புக் கொடி ஏந்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடியோ

2018-ம் ஆண்டில் இவர்கள் நடத்தும் மூன்றாவது போராட்டம் இதுவாகும். இதனிடையே பணியில் ஈடுபட்ட ஓலா ஓட்டுநரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x