Published : 13 Oct 2018 05:07 PM
Last Updated : 13 Oct 2018 05:07 PM

காஷ்மீரில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

காஷ்மீரைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் இருவர் இன்று பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதில், ஒரு தீவிரவாதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்னொரு தீவிரவாதி குண்டடிப்பட்டு கவலைக்கிடமானநிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் புல்வாமா மாவட்டத்தில் பாப்கண்ட் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் நேற்று இரவு தேடுதல் வேட்டையில் இறங்கினர். 

இன்று காலை தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர்களை எதிர்த்து பாதுகாப்புப் படையினர் சுடத்தொடங்கினர் இதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாக காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கொல்லப்பட்ட தீவிரவாதி அடையாளங் காணப்பட்டுள்ளார். அவர் பெயர் சபீர் அஹ்மத் டார் என்பதாகும். அவர் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்.

குண்டடிபட்ட இன்னொரு தீவிரவாதி

இத்தேடுதல் வேட்டையில் இன்னொரு தீவிரவாதி, பாதுகாப்புப் படையினரால் சுடப்பட்டார். அவர் புல்வாமா மாவட்டத்தின் முரான் கிராமத்தைச் சேர்ந்த சவுகாத் அகமது என்று அடையாளங் காணப்பட்டுள்ளார்.

இவர் தன்னைக் காத்துக்கொள்ள தப்பிச் செல்ல முயன்றபோது கண்டுபிடிக்கப்பட்டு ஸ்ரீநகரின் எஸ்.எம்.எச்.எஸ் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடங்களில் இருந்து சில ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x