Published : 09 Oct 2018 06:34 PM
Last Updated : 09 Oct 2018 06:34 PM
கொல்கத்தாவில் 6 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் அரசுப்பள்ளி ஆசிரியருக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
கொல்கத்தாவில் கடந்த செப்.26-ம் தேதி 6 வயது சிறுமியை ஆசிரியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களில் சிலர் பள்ளி வளாகத்துக்குள் கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
இதுகுறித்துப் பேசிய தென்கிழக்கு பிராந்திய டிசிபி கல்யாண் முகர்ஜி, ''குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரைக் கைது செய்துள்ளோம். அவரின் மீது சட்டப்பிரிவு 354 ஏ மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
போராட்டக்காரர்கள் செங்கல்லை வீசியதில் காவல்துறையினர் 10 பேர் காயமடைந்துள்ளனர். இதனால் அவர்கள் மீது லத்தியைப் பிரயோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT