Published : 13 Oct 2018 08:05 AM
Last Updated : 13 Oct 2018 08:05 AM
பிரதமர் நரேந்திர மோடி வரும் 28, 29 ஆகிய தேதிகளில் ஜப்பான் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தியா - ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி ஜப்பான் செல்கிறார்.
பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே பங்கேற்கும் 5-வது வருடாந்திர உச்சி மாநாடு இதுவாகும்.
இந்திய - பசிபிக் பிராந்திய நிலவரம் உட்பட பல்வேறு பிராந் திய, சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.
இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா - ஜப் பான் இடையிலான பாரம்பரிய நட்புறவை பிரதமர் மோடி யின் பயணம் உறுதி செய்யும்" என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT