Last Updated : 14 Oct, 2018 12:15 AM

 

Published : 14 Oct 2018 12:15 AM
Last Updated : 14 Oct 2018 12:15 AM

தீவிரவாதிக்கு அஞ்சலி செலுத்த முயற்சி: உ.பி. அலிகர் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு

ஜம்மு- காஷ்மீரில் அண்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிமன்னான் வாணிக்கு உத்தரபிர தேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் சிறப்பு தொழுகை நடத்தி அஞ்சலி செலுத்த முயன்றனர். இதுதொடர்பாக 2 மாணவர்கள் மீது போலீஸார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காஷ்மீரின் வட பகுதியில் உள்ள குப்வாராவின் டோக்கிபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் மன்னான் பஷீர் வாணி (27). இவர், கல்லூரி உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் பஷீர் அகமது வாணி என்பவரின் மகன் ஆவார்.

உ.பி.யில் அலிகர் முஸ்லீம் பல் கலைகழகத்தின் மண்ணியல் துறை யில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு மாணவராக மன்னான் வாணி பயின்று வந்தார்.

சிறந்த மாணவராக கருதப் படும் மன்னான் வாணி, கடந்த ஜனவரி மாதம் திடீரென தலை மறைவானவர். சில தினங்களுக்கு பின்னர், கையில் யுபிஜிஎல் எனும் இயந்திர துப்பாக்கியுடன் நிற்பது போன்ற தமது புகைப் படத்தை முகநூலில் மன்னான் வாணி பதிவேற்றம் செய்திருந்தார். மேலும்,  ஹிஜ்புல் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தில் கமாண்ட ராக தாம் இணைந்து விட்டதாகவும் அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தத் தகவலை அடுத்து, அலிகர் பல்கலைக்கழகத்திலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை, காஷ்மீரில் ராணுவத்தின ருடன் நடந்த துப்பாக்கிச் சண் டையில் மன்னான் வாணி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், தீவிரவாதி யான மன்னானுக்கு அஞ்சலிசெலுத்துவதற்காக, அதேதினத்தில், அலிகர் பல்கலைக்கழத்தில் பயிலும் காஷ்மீர் மாணவர்கள் சுமார் 200 பேர் கூடி 'ஜனாஸா எ நமாஸ்’ எனப்படும் சிறப்பு தொழுகை நடத்த முயன்றனர். இதனை அங்கு பயிலும் மற்றமுஸ்லிம் மாணவர்கள் தடுத்த துடன், பல்கலைக்கழக நிர்வாகத் துக்கும் தகவல் அளித்தனர்.

இதையடுத்து, அந்த தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக 2 மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இந்த விவகாரம் குறித்துவிளக்கமளிக்குமாறு 7 மாணவர் களுக்கு பல்கலை. நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதனிடையே, 2 காஷ்மீர் மாணவர்கள் உட்பட பெயர்தெரியாத சிலர் மீது தேசத்து ரோகம் உட்பட பல்வேறு பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். இதற்கு மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு எழும்பக்கூடும் என்பதால் அந்தப் பல்கலைக்கழகத்துக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x