Published : 09 Oct 2018 09:36 PM
Last Updated : 09 Oct 2018 09:36 PM

சபரிமலை தீர்ப்பு: இரு நீதிபதிகளின் மாறுபட்ட பார்வை

சபரிமலையில் அனைத்துவயதுப் பெண்களும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்துத் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான இந்து மல்ஹோத்ராவும், முன்னாள் நீதிபதியுமான கே.டி.தாமஸும் இரு வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

சபரிமலையில் 10 வயது முதல் 50 வயதுள்ள மாத விலக்கு வரும் பெண்கள் செல்ல நூற்றாண்டு காலமாக அனுமதியில்லை. இந்நிலையில் இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் சென்று வழிபடலாம், பெண்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பது அரசமைப்புச்சட்டத்துக்கு விரோதமானது என்று தீர்ப்பளித்தனர்.

இந்தத் தீர்ப்பின் போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆர்எப் நாரிமன், கான்வில்கர், சந்திரசூட் ஆகியோர் பெண்களை அனுமதிக்கலாம் என்றனர். ஆனால், ஒரே ஒரு பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீர்ப்பை வழங்கி இருந்தார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா சபரிமலை தீர்ப்பில் கூறுகையில், மத விவகாரங்களிலும், நம்பிக்கைகளிலும், மதநம்பிக்கையில்லாதவர்கள், இந்த விவகாரத்தில் தொடர்பில்லாதவர்கள் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்வதை தடைச செய்ய வேண்டும். சபரிமலையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய பழக்கங்கள் மதிக்கப்பட வேண்டும்.

மதவிவகாரங்கள் அனைத்திலும் அதற்குச் சம்பந்தம் இல்லாவதர்களும், தொடர்பில்லாதவர்களும் பொதுநலன் மனு தாக்கல் செய்யலாம் என்று அனுமதித்தால், மக்களின் நம்பிக்கைகளையும், பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டுவரும் பழக்கங்களும் கேள்விக்கு உள்ளாக்கப்படும். பொதுநல மனு தாக்கல் செய்பவர் மதநம்பிக்கை இல்லாதவராக இருக்கலாம், அல்லது குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவராகக்கூட இருக்கலாம் எனத் தெரிவித்தார்.

ஆனால், சபரிமலை விவகாரத்தில் அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பிரிவு 32ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என்பது தீர்ப்பு வழங்கிய மற்ற 4 நீதிபதிகளின் கருத்தாக இருக்கிறது. இதே கருத்தை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸும் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ்தான் கேரளாவில் சபரிமலை குறித்த விவகாரத்தை முதன்முதலில் விசாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் கூறியதாவது:

சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்த தீர்ப்பில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா கூறிய நம்பிக்கை என்பது பகுத்தறிவற்றது என்கிறார். ஆனால், எப்போதெல்லாம் நம்பிக்கை அடிப்படை உரிமைகளைப் பாதிக்கிறதோ அப்போது நீதிமன்றம் தலையிடும். ஆச்சாரம் எப்போதும் அனாச்சாரமாக(தவறான நம்பிக்கை) இருக்கக் கூடாது.

அரசியமைப்புச் சட்டத்தின் கொள்கைகளும், நம்பிக்கைகளும், அடிப்படை உரிமைகளோடு ஒத்து இருக்க வேண்டும். சமீபத்தில் பீமா கோரிகான் வழக்கில் சமூக ஆர்வலர்கள் 5 பேர் கைது புனே போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக ரோமிலா தாபர் உள்ளிட்ட4 பேர் பொதுநலன் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பிரதானமாகத் தெரிவித்தனர். அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டவிவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டியது இல்லை. மற்றவர்களும் தாக்கல் செய்யலாம்.

சபரிமலை விவகாரத்தில் ஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைய இருக்கும் தடை தொடரும், தேவபிரஸன்னத்தில் கூறியது கடைப்பிடிக்கலாம் என்று, கடந்த 1991-ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இவ்வாறு கூறுவது நீதிமன்றத்தின் பணியல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x