Published : 16 Oct 2018 07:32 AM
Last Updated : 16 Oct 2018 07:32 AM
சர்வதேச அளவில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் நாட்டின் நிதிப் பற்றாக் குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேசமயம் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பும் சரிந்து வருகிறது.
ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப் படுத்த சில இறக்குமதி கட்டுப்பாடு களை அரசு விதித்த போதிலும் அது பெரிய அளவில் பலன் தரவில்லை.
இந்நிலையில் நேற்று நடை பெற்ற சர்வதேச எண்ணெய் உற் பத்தி செய்யும் நிறுவன அதிகாரி கள், இந்திய அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் மோடி பேசினார். அப் போது கச்சா எண்ணெய் இறக்கு மதி செய்வதில் டாலர் மட்டுமே அளிக்க வேண்டுமா, அதற்குப் பதில் ரூபாய் கரன்சியை எந் தெந்த நிறுவனங்கள் ஏற்கும் வாய்ப்புள்ளது என்பதை ஆராயுமாறு அவர் இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரி களைக் கேட்டுக் கொண்டார்.
ரூபாய் பரிவர்த்தனையை ஏற்றுக் கொண்டால் அது ரூபாய் மதிப்பு சரிவை ஓரளவு ஈடுகட்டுவதோடு நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பை ஓரளவு சமாளிக்க உதவும் என்று பிரதமர் கருதுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவின் எரிபொருள் தேவையில் 80 சதவீதம் இறக்கு மதி மூலமே பூர்த்தி செய்யப் படுகிறது. இதனால் கச்சா எண் ணெய் இறக்குமதிக்கு இந்தியா மிக அதிக அளவில் செலவிட வேண்டியுள்ளது.
கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் தவிர்த்து பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகளை ஆராயுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து தனது கவலையை மோடி இக்கூட்டத்தில் வெளிப்படுத் தியதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
எண்ணெய், எரிவாயு அகழ்வில் புதிய வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வராதது ஏன் என்று கேள்வியெழுப்பினார். மேலும் இதுபோன்ற நிறுவனங்களை ஈர்ப்பதற்காக தேவையான கொள்கை மாற்றங்களை செய்த போதிலும் அவை வராததற்கான காரணங்களை ஆராயுமாறு அவர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண் டார். தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது சர்வதேச அளவில் வளர்ச்சியை பாதிக்கும் என்றும் மோடி சுட்டிக் காட்டினார்.
இந்தக் கூட்டத்தில் சவூதி அரேபியாவின் எண்ணெய் துறை அமைச்சர் காலித் அல் ஃபாலி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT