Last Updated : 29 Oct, 2018 02:54 PM

 

Published : 29 Oct 2018 02:54 PM
Last Updated : 29 Oct 2018 02:54 PM

ரயில் மோதி மூவர் உயிரிழப்பு: தண்டவாளப் பாதையில் அமர்ந்து மது அருந்தியதால் விபரீதம்

தண்டவாளப் பாதையில் அமர்ந்து மது அருந்தியவர்கள் மீது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் இன்று காலை டெல்லி அருகே நடந்துள்ளது.

வடக்கு ரயில்வே தலைமை பொதுமக்கள் தொடர்பு அதிகாரி நிதின் சவுத்திரி இதுகுறித்து கூறுகையில், ''டெல்லியை அடுத்துள்ள நங்லோய் ரயில்வே நிலையத்தின் அருகே 12446 பிகானெர்-டெல்லி எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அதேநேரம் ரயில் வந்துகொண்டிருக்கும் தண்டவாளப் பாதை மீது மூன்று பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் இவர்கள் மோதிச் சென்றதால் மூவர் உடல்களும் சிதறி விழுந்தன'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x