Published : 23 Oct 2018 11:27 AM
Last Updated : 23 Oct 2018 11:27 AM
தனது வீட்டில் நுழைந்த நான்கு பேர் தன்னை கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக 9-ம் வகுப்பு மாணவி நேற்று முசாபர்நகர் நகர காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பீஹார் மாநிலத்தில் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள மிதன்பூரா எனும் நகரில் இச்சம்பவம் நேற்று நடந்துள்ளது.
காவல்நிலைய மூத்த காவல் கண்காணிப்பாளர், மனோஜ் குமார் இதுகுறித்து கூறுகையில்,
‘‘நேற்று காலை( திங்கள் கிழமை), மிதன்புரா காவல் நிலையத்திற்கு வந்த மாணவி ஒரு புகார் அளித்தார். அவர் தற்போது 9-ம் வகுப்பு படித்து வருபவர். புகாரில், தன்னை ''இம்லி சவுக்'' என்ற இடத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நான்கு பேர் தன்னை கூட்டுப் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.
நான்கு பேரில், ஒருவர் பருத்தி ஆலை உரிமையாளர், வீட்டுக்குள் நுழைந்த நால்வரும் குடும்பத்தினரை அடித்து உதைத்ததாகவும் வீட்டில் உள்ளவர்களின் கைகளைக் கட்டிவிட்டு அவர்கள் முன்னிலையிலேயே தன்னை அந்நால்வரும் பலாத்காரம் செய்துவிட்டதாக அப் பெண் புகாரில் தெரிவித்திருந்தார். புகார் மிகவும் முக்கியப் பிரச்சினையைக் கொண்டிருப்பதால் உடனே அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்பட்டது.
இச்சோதனையில் அவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது நிச்சயமாக சொல்வதற்கில்லை என்று தெரியவந்துள்ளது. மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இப்பெண்ணின் மீது கூட்டு பலாத்காரம் நடந்ததாக சொல்லப்பட்ட எதுவும் ''உறுதி செய்யப்படவில்லை'' என சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் போலீசார் எப்ஐஆர் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீஸார் இப்பிரச்சினையில், பாலியல் பலாத்கார வழக்கில் நான்கு பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் மீது ஏன் குற்றச்சாட்ட வேண்டும் என்பது குறித்து அறிய விசாரணை நடத்தி வருகின்றனர்’’ என காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT