Published : 02 Oct 2018 09:24 AM
Last Updated : 02 Oct 2018 09:24 AM

பெரிய நிறுவனங்களின் ரூ.3.16 லட்சம் கோடி கடன் ரத்து: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பொதுத்துறை வங்கிகளில் பெரு நிறுவனங்கள் வாங்கிய ரூ.3.16 லட்சம் கோடி கடன் ரத்து செய்யப் பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பொதுத்துறை வங்கிகளில் பெரிய நிறுவனங்கள் பெற்ற ரூ.3.16 லட்சம் கோடி வங்கிகளின் வரவு செலவு கணக்கில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பணமதிப்பு நீக்க நடவடிக்கை யின்போது சாமானிய மக்கள் தங்கள் சேமிப்பு முழுவதையும் வங்கியில் டெபாசிட் செய்தனர். ஆதார் எண்ணை வங்கியில் அளித்தனர். வங்கிக் கணக்கில் இருந்து சொந்த பணத்தை எடுக்க முடியாமல் தவித்தனர்.

அதேநேரம் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது பெருநிறு வனங்களின் கருப்பு பணம் வெள்ளைப் பணமாக மாற்றப்பட் டது. தற்போது அந்த நிறுவனங் களின் ரூ.3.16 லட்சம் கோடி கடன் பொதுத்துறை வங்கிகளின் வரவு செலவு கணக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது மக்களின் பணம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x