Last Updated : 13 Oct, 2018 06:35 PM

 

Published : 13 Oct 2018 06:35 PM
Last Updated : 13 Oct 2018 06:35 PM

மத்திய அமைச்சர் அக்பர் மீதான குற்றச்சாட்டை அப்படியே நம்பிவிடமுடியாது: அமித் ஷா மழுப்பல் பதில்

மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பல்வேறு பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களைத் தெரிவித்துள்ளது குறித்து கருத்துத் தெரிவித்த பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா, அக்பர் மீதான குற்றச்சாட்டு அனைத்தையும் அப்படியே நம்பிடவிட முடியாது என்று மழுப்பலாகப் பதில் அளித்துள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் 40 ஆண்டுகளுக்கும் மேலான பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெண்கள் தாங்கள் பாலியல் ரீதியாகச் சீண்டல்களுக்கும்,துன்புறுத்தல்களுக்கும் ஆளானதை # மீடூ ஹேஸ்டேக் மூலம் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வெளியிட்டுவருகின்றனர்.

அந்தவகையில், மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது இதுவரை பெண் பத்திரிகையாளர்கள் 6 பேர் பாலியல் புகார்களை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் அமெரிக்க பத்திரிகையாளர் மஜ்லி டி பு காம்ப், போர்ஸ் பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் கஜாலா வஹாப், மின்ட் லாங்க் ஆசிரியர் பிரியா ரமணி உள்ளிட்ட பலர் குற்றச்சாட்டு கூறினார்கள்.

ஆனால், மத்திய அமைச்சர் அக்பர் தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் பயணம் மேற்கொண்டு இருப்பதால், அவரால் இந்தக் குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான பதிலும், விளக்கமும் அளிக்க முடியவிலலை.

இதுகுறித்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், இந்த விஷயத்தில் நான் கருத்துக் கூறுவது கடினம். ஏனென்றால், இணையதளங்களில் ஏராளமான விஷயங்கள் வரும் அதற்கெல்லாம் நான் எதிர்வினையாற்றிக்கொண்டிருக்க முடியாது. அக்பர் மீதான குற்றச்சாட்டுகளையும், புகார்களையும் ஆய்வு செய்ய வேண்டும். அக்பர் மீதான புகார்கள் உண்மையில் நடந்திருக்கிறதா அல்லது இல்லையா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அது உண்மையா பொய்யா என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x