Published : 16 Oct 2018 07:38 AM
Last Updated : 16 Oct 2018 07:38 AM
தித்லி புயலால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஆந்திர அரசு நேற்று அறிவித் தது.
சமீபத்தில் வங்கக் கடலில் உருவான ‘தித்லி’ புயல் காரணமாக கடலோர ஆந்திர மாவட்டங்களைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் மற்றும் முந்திரி, தென்னை, வாழை தோப்புகள் சேதமடைந்தன.
இந்நிலையில், ஆந்திர அரசு நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
புயல் காரணமாக உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 25 கிலோ அரிசி, மீனவர்களுக்கு 50 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் பாமாயில், ஒரு கிலோ உருளை கிழக்கு, ஒரு கிலோ வெங்காயம், அரை கிலோ சர்க்கரை வழங்கப்படும்.
பயிர்களுக்கு நஷ்ட ஈடு
ஒரு ஏக்கர் வாழைக்கு ரூ.30 ஆயிரம், நெற்பயிர் மற்றும் இதர பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம், தென்னை மற்றும் முந்திரி பயிரிட்ட பெரிய விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்கப்படும். முழுமையாக சேதமடைந்த படகுக்கு ரூ.1 லட்சம், மின்விசை படகுக்கு ரூ.6 லட்சம், மீன் வலைக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் இறால் பண்ணை ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். வீடுகளை இழந்தோருக்கு 2.5 லட்சம் வரையிலும், சேதமடைந்த வீடுகளை சீர மைக்க ரூ.10 ஆயிரமும் நிவாரண நிதியின் கீழ் வழங்கப்படும். இறந்த பசு, எருது, காளை மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.
இவ்வாறு ஆந்திர அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT