Published : 13 Oct 2018 12:35 PM
Last Updated : 13 Oct 2018 12:35 PM
டெல்லியில் வங்கியில் புகுந்து கொள்ளையடித்த கும்பல் ஊழியரை சுட்டுக்கொன்ற சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் துவாரகா பகுதியில் கார்ப்பரேஷன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நேற்று பிற்கல் ஊழியர்கள் வழக்கம் போல் பணியாற்றிக் கொண்டு இருந்தனர். அப்போது ஆறு பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல் ஒன்று வங்கிக்குள் நுழைந்தது.
வங்கியின் காசாளர் அமர்ந்து இருந்த பகுதிக்குச் சென்றது. காசாளர் சந்தோஷ் குமாரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல் ஊழியர்கள் அனைவரையும் அசையாமல் அமரும்படி மிரட்டல் விடுத்தது. அப்போது சந்தோஷ் குமாரை அந்த கும்பல் சரமாரியாக சுட்டது. பின்னர் காசாளர் பகுதியில் இருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தது.
வங்கியின் பாதுகாவலரிடம் இருந்த துப்பாகிக்கியையும் பறித்துக் கொண்டு அந்த கும்பல் தப்பியோடியது. கொள்ளை சம்பவம் நடந்தபோது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
#WATCH: CCTV footage of a corporation bank being robbed in Delhi's Khaira yesterday by armed assailants. Cashier was shot dead. Investigation underway. pic.twitter.com/4XSz1JX8AF
— ANI (@ANI) October 13, 2018
கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்ற பிறகு, ஊழிர்யர்கள் சந்தோஷ் குமாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசாரர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT