Published : 24 Oct 2018 09:26 AM
Last Updated : 24 Oct 2018 09:26 AM

பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரஜெளரி பகுதிக்குள் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 21-ம் தேதி ஊடுருவ முயன்றனர். அப்போது, அங் கிருந்த இந்திய ராணுவ வீரர் களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், பாகிஸ்தானைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் துப்பாக்கிச் சண்டையில் இந்தியத் தரப்பில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:

ஜம்மு-காஷ்மீரில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் தூதரக உயரதிகாரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு நேற்று நேரில் வரவழைக்கப்பட்டார். அப்போது, பாகிஸ்தானின் இந்த செயலுக்கு இந்தியா சார்பில் அவரி டம் கடும் கண்டனம் தெரிவிக்கப் பட்டது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையானது, தீவிரவாதத் துக்கு அந்நாடு எந்த அளவுக்கு துணை போகிறது என்பதற்கு சிறந்த சான்றாக விளங்குவதாக வும் வெளியுறவுத் துறை அதிகாரி கள் தெரிவித்தனர். மேலும், இனி இதுபோன்ற செயல்களில் பாகிஸ்தான் ஈடுபடக் கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x