Published : 01 Oct 2018 12:40 PM
Last Updated : 01 Oct 2018 12:40 PM
ஒரே பெண்ணைக் காதலித்த இரு மாணவர்கள் தங்களை உயிரோடு எரித்துக் கொண்ட துயர சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
ஹைதராபாத்திலிருந்து 190 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஜக்தியால் நகரம். இங்கு நேற்று இரவு நடைபெற்ற இச்சம்பவத்தில் 16 வயதுள்ள இரு மாணவர்களும் மது அருந்திவிட்டு இக்கொடூர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
இதில் மகேந்தர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், இன்னொருவர் ரவி தேஜா என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிருக்குப் போராடிய நிலையில் உயிரிழந்தார்.
மாணவர்களின் இரு குடும்பத்தினரும் இதில் மூன்றாவதாக ஒரு மாணவனும் அவர்களோடு இருந்திருக்கிறான் என்று கூறியது இவ்வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தீ வைத்துக் கொண்டதற்கு முன்பு தங்கள்மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டுள்ளதாகத் விசாரணை அதிகாரிகள் தெரிவத்தனர். சம்பவ இடத்தில் பீர் பாட்டில்களும் செல்போன்களையும் அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.
இருவரும் ஒரே பெண்ணைக் காதலித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரு மிஷனரி பள்ளியில் மகேந்தர் மற்றும் ரவி இருவரும் ஒரே வகுப்பில் படித்து வந்துள்ளனர். மாணவியும் அதே பள்ளியில் படித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இறந்தவர்களின் செல்போன்களில் கிடைத்த தரவுகளை போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர். ஒருவர் இன்னொருவருக்கு பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொண்டதும் இதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் இது கொலையா தற்கொலையா என்ன வகையான உயிரிழப்பு, என முடிவு செய்வதில் போலீஸார் திணறி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT