Published : 15 Oct 2018 09:44 AM
Last Updated : 15 Oct 2018 09:44 AM
தேங்கியிருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கப் புதிய முறையைக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறார், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் ரஞ்சன் கோகோய். “கிரிமினல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட பலர், தங்கள் தண்டனைக் காலத்தை அனுபவித்த பின்னரே நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் நிலை இருக்கிறது. சிவில் வழக்குகளில் இரண்டு மூன்று தலைமுறைகளுக்குப் பிறகே தீர்ப்பு கிடைக்கிறது. இது முக்கியமான பிரச்சினை. எனினும், இதற்குத் தீர்வு காண்பது கடினமான விஷயமல்ல. நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார் ரஞ்சன் கோகோய். புதிய முறையின்படி, கிரிமினல் வழக்குகள் தொடர்பான முறையீடுகளை விசாரிக்கும் அமர்வுகள், தாங்கள் விசாரிக்கும் அன்றாட வழக்குப் பட்டியலில் முதலில், 10 பழைய வழக்குகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதற்கும், பட்டியலிடப்படுவதற்கும் இடைப்பட்ட நேரமும் குறைக்கப்படும். நீண்ட காலம் நிலுவையில் இருக்கும் வழக்குகள் தீர்வதோடு, சிறையில் நீண்ட காலமாக இருக்கும் விசாரணைக் கைதிகளின் சிக்கலும் இதன் மூலம் தீரும் என்று எதிர்பார்ப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT