Published : 21 Aug 2014 11:01 AM
Last Updated : 21 Aug 2014 11:01 AM
ஆந்திர சட்டசபையில் ரூ. 1.11 லட்சம் கோடியில் 2014-15-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் புதன் கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
ஆந்திராவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான அரசு சார்பில், நிதி அமைச்சர் எனமல ராமகிருஷ்ணுடு ரூ. 1,11,824 கோடியில் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.2-க்கு 20 லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், பட்ஜெட்டில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்காக ரூ.3,339 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, விபத்து நிவாரண நிதிக்காக ரூ.403 கோடியும், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்காக ரூ.111 கோடியும், பள்ளிக் கல்வித்துறைக்காக ரூ.12,595 கோடியும், குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறைக்காக ரூ.4,388 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வங்கிகளால் வழங்கப்பட்ட ரூ. 1.5 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் விவசாயத்துக்கு தினமும் 9 மணி நேரம் மின்சாரம் விநி யோகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில பிரிவினைக்கு பிறகு ஆந்திரத்தில் தாக்கலாகும் முதல் பட்ஜெட் இது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT