Published : 22 Oct 2018 11:19 AM
Last Updated : 22 Oct 2018 11:19 AM

கப்பல் முனையில் அமர்ந்து செல்பி: சர்ச்சைக்கு ஆளான மகாராஷ்டிர முதல்வரின் மனைவி; வைரலாகும் வீடியோ

மகாராஷ்ட்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மனைவி அம்ருதா கப்பல் பயணத்தில் ஆபத்தான பகுதியில் அமர்ந்து செல்பி எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் இருந்து கோவாவுக்கு அதிநவீன கப்பல் போக்குவரத்து சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் அமைச்சர் நிதின் கட்கரி விழாவில் கலந்து கொண்டு கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மற்றும் அவரது மனைவி அம்ருதாவும் பங்கேற்றனர்.

கப்பலில் ஏறி சுற்றி பார்த்த அம்ருதா கப்பலின் முனைப்பகுதிக்கு சென்று அமர்ந்து ரசித்தார். கப்பலின் முனைப்பகுதியில் அமர்ந்தவாறு செல்பியும் எடுத்து கொண்டார். ஆனால் கப்பல் ஊழியர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் அவரிடம் சென்று கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டனர். உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியே வருமாறு கூறினர்.

ஆனால் அதை பொருட்படுத்தாமல் அவர் ஆபத்தான பகுதியில் அமர்ந்தவாறு தொடர்ந்து செல்பி எடுத்த வண்ணம் இருந்தார். அவர் செல்பி எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அம்ருதாவின் செயலை பலரும் விமர்சித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x