Last Updated : 21 Aug, 2018 05:54 PM

 

Published : 21 Aug 2018 05:54 PM
Last Updated : 21 Aug 2018 05:54 PM

ரயில்வே தேர்வில் ஆள்மாறாட்டம்: பிஹார் இளைஞர்கள் 2 பேர் கைது

மத்தியப் பிரதேசத்தில், கடந்த வாரம் ரயில்வே வேலைவாய்ப்புத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய இருவரை இந்தூர் நகரப் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து பலாசியா காவல்நிலைய பொறுப்பு அதிகாரி அஜித் சிங் பாய்ஸ் தெரிவிக்கையில்,  ''ரயில்வே வேலைவாய்ப்புத் தேர்வில் இரண்டு பேர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியுள்ளனர். அவர்கள் பிஹார் மாநிலத்தின் நாலந்தா மாவட்டத்தைச் சேர்ந்த, திராஜ் குமார் (21) மற்றும் ரஞ்சித் பிரசாத் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் நடத்திய தேர்வு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு கைதாகியுள்ளனர்.

இதில் திராஜ் குமார் என்பவர் இவர் அபிமன்யூ குமார் என்பவருக்குப் பதிலாக தேர்வு எழுதியது கண்டறியப்பட்டது. பாலஸியா நகரின் இஸ்லாமியா கரிமியா கல்லூரியில் ஆகஸ்ட் 20 அன்று நடைபெற்ற ரயில்வே தேர்வில் இவர் பிடிபட்டார்.

அதேபோல், அதற்கு முன்பு அதே தேர்வு மையத்தில் ரஞ்சித் குமார் என்பவர் ஆகஸ்ட் 14 அன்று சந்தோஷ் குமார் என்பவருக்குப் பதிலாக தேர்வு எழுதும்போது பிடிபட்டார்.

இதற்குப் பின்னால் பெரிய பெரிய மோசடி நடத்திருக்க வாய்ப்புள்ளது என்பதால், ஒரு விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. பிஹாரில் போலீஸ் விசாரணைக் குழுவை அனுப்பியுள்ளோம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலியாக தேர்வு எழுதுவதற்கு காரணமான விண்ணப்பதாரர்கள் கைது செய்யப்படுவார்கள்'' என்று அஜித் சிங் பாய்ஸ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x