Published : 07 Aug 2018 09:47 AM
Last Updated : 07 Aug 2018 09:47 AM
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத் துடன் விவசாயப் பணிகளையும் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ராஷ்ட்ரிய கிஸான் மஹா சங்கா (தேசிய விவசாயிகள் மகாசங்கம்) எனும் பெயரில் நாட்டின் சுமார் 2 லட்சம் விவசாய சங்கங்கள் இணைந்துள்ளன. இதன் சார்பில் பிரதமர் மற்றும் 28 மாநில முதல்வர்களுக்கு சமீபத்தில் ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விவசாயப் பணி களுடன் இணைக்கும்படி வலியுறுத் தப்பட்டது.
இக்கடிதத்தில் அளிக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரத்தின்படி 26.3 கோடி எண்ணிக்கையில் விவ சாயிகள் உள்ளதாகவும், அதில் பாதி அளவு விவசாயப் பணி யாளர்களாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் இணைக்கப்பட வேண்டிய விவ சாயப் பணிகளும் அதில் பட்டியலிடப்பட்டு இருந்தன.
அணைகள், நீர்த்தேக்கங்கள், பாரம்பரிய ஏரிகள், குளங்களை புனரமைப்பது, விவசாய நிலங் களை சீரழிக்கும் நீர்நிலைகள், வறட்சியில் இருந்து காக்கும் பணி, சிறிய வகை பயிர்களை வளர்த்தும் நீர்வசதி போன்றவை இதில் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில், மக்களவை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு விவசாய சங்கங்களின் இந்த கோரிக்கையை ஏற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துடன் விவசாயப் பணிகளையும் இணைக்க திட்ட மிடப்பட்டு வருகிறது. இதனால், விவசாயத் தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் வேலைவாய்ப்பு பெருகும் எனக் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT