

மார்க்காபுரம்: ஆந்திர மாநிலம், மார்க்காபுரம் அருகே ராயவரம் எனுமிடத்தில் வியாழக்கிழமை அதிகாலை 6.30 மணிக்கு ஜல்லி கற்கள் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியின் டீசல் டேங்க் மீது தனியார் சொகுசு பேருந்து மோதியது. இதில் பேருந்து தீப்பற்றி எரிந்ததில் 14 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக பேருந்து உரிமையாளர் ஹரிகிருஷ்ணாவை மார்க்காபுரம் போலீஸார் நேற்று கைது செய்தனர். பேருந்து சரிவர பிரேக் பிடிக்காமலும், ஸ்டீயரிங் நின்று போனதாலும் தான் இந்த விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது. இவர்கள் பேருந்தை சரிவர பராமரிக்கவில்லை எனத் தெரிகிறது.