Last Updated : 30 Aug, 2018 08:45 AM

 

Published : 30 Aug 2018 08:45 AM
Last Updated : 30 Aug 2018 08:45 AM

உ.பி.யில் புதிய கட்சியை தொடங்குகிறார் ஷிவ்பால் சிங்

உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் சிங் யாதவின் சித்தப்பாவும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஷிவ்பால்சிங் யாதவ் (61) புதிய கட்சி தொடங்கவுள்ளார்.

உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி கடந்த முறை ஆளும் கட்சியாக இருந்தது. இதில் முதல்வர் அகிலேஷ் - ஷிவ்பால் யாதவ் இடையே கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ், தனது தம்பி ஷிவ்பாலுக்கு ஆதரவாக இருந்தார். இதனால், கட்சியில் பிளவு ஏற்பட்டது.

இந்தப் பிரச்சினையில் அகிலேஷ் அணியே சமாஜ்வாதி கட்சி என தேர்தல் ஆணையம் கூறியது. இதன் பிறகு சமாதானம் அடைந்த ஷிவ்பால், உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் அகிலேஷுடன் இணைந்திருந்தார். எனினும், அவருக்கு முன்பு போல் கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்திருந்த ஷிவ்பால் தற்போது புதிய கட்சி தொடங்கி, சமாஜ்வாதி மதச்சார்பற்ற முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக ஷிவ்பால் கூறும்போது, “கடந்த 2 வருடங் களாக எனக்கு எந்தப் பொறுப்பும் அளிக்காமல் புறக்கணித்து வரு வதை என்னால் எப்படி பொறுத் துக்கொள்ள முடியும்? எனவே நான் அனைவருடன் சேர்ந்து மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன்” என்றார்.

2012-ம் ஆண்டு உ.பி. சட்டப் பேரவை தேர்தலுக்கு பிறகு அகிலேஷை முதல்வராக்கினார் முலாயம். அப்போதே அகிலேஷ் - ஷிவ்பால் இடையே மோதல் தொடங்கியது. என்றாலும் 2016-ல் இது வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது, ஷிவ்பால் உள்ளிட்டோ ரின் அமைச்சர் பதவியை பறித்து அகிலேஷ் நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து ஏற்பட்ட சமாதானத் துக்கு பிறகு உ.பி. சட்டப்பேரவை தேர்தலில் ஜஸ்வந்த் நகர் தொகுதியில் போட்டியிட்ட ஷிவ்பால் வெற்றி பெற்றார். இவருடனான மோதலால், யாதவ் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் 14 தொகுதிகளில் சமாஜ்வாதிக்கு நான்கில் மட்டுமே வெற்றி கிடைத்தது. ஷிவ்பால் தொடங்கும் புதிய கட்சி அகிலேஷ்-மாயாவதி வாக்குகளை பிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x