Published : 13 Aug 2018 07:46 AM
Last Updated : 13 Aug 2018 07:46 AM
உத்தரபிரதேசத்தில் பாலியா தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ உமா சங்கர் நேற்று லக்னோவில் கூறியதாவது:
கடந்த 6-ம் தேதி எனது இ-மெயிலை பார்க்குமாறு எனக்கு வாட்ஸ் ஆப்பில் செய்தி வந்தது. அப்போது டெல்லியில் இருந்த நான் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். 8-ம் தேதி அதே செல்போன் எண்ணில் இருந்து ‘இது கடைசி எச்சரிக்கை. ஒரு கோடி கொடுக்கவும்’ என்று மிரட்டல் செய்தி இருந்தது. உடனே, என் இமெயிலை பார்த்தேன். அதில் தீவிரவாதி தாவூத் இப்ராகிமின் புகைப்படமும், பாலியா தொகுதிக்கு நான் தொடர்ந்து சேவை செய்ய வேண்டுமானால், ரூ.1 கோடி கொடுக்கவும் என்றும் இல்லாவிட்டால், என்னைக் கொன்று விடுவோம் என்றும் மிரட்டல் விடப்பட்டு இருந்தது. எனக்கு செய்தி வந்த செல்போன் எண்ணை பரிசோதித்ததில் அது தாவூத் இப்ராகிம் குழுவினரின் எண் என்று தெரிந்தது. இது குறித்து போலீஸில் புகார் அளித்துள்ளேன்.
இவ்வாறு எம்எல்ஏ உமா சங்கர் கூறினார்.
உமா சங்கர் அளித்த புகார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT