Published : 01 Aug 2018 12:57 PM
Last Updated : 01 Aug 2018 12:57 PM
முத்தலாக்கில் பாதிக்கப்பட்டவருக்கு பத்வா வழங்கியவரின் சொத்துக்களை பறிமுதல் செய்யும்படி மாவட்ட நிர்வாகத்த்தை உத்தரப் பிரதேச சிறுபான்மை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
2015 -ம் ஆண்டில் நிதா கான் என்பவரை ஷீரான் ரஸா கான் திருமணம் செய்து கொண்டார், ஆனால் அடுத்த ஆண்டே நிதா கானுக்கு (2016) முத்தலாக் வழங்கினார். பின்னர் நிதா கான் முத்தலாக்கினால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்காக போராடத் தொடங்கினார்.
கடந்த ஜூலை 16 அன்று ஹலாலாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பான்கானா பகுதிக்குச் செல்ல முயன்ற கான் மீது, அவரது கணவர் மற்றும் கணவரின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் நிக்கா ஹலாலாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படும் நிதா கானுக்கு பாதுகாப்பு வழங்க முடிவெடுத்தது. நிதா கான் அளித்த அளித்த புகாரின்பேரில் அவரது கணவர் ஷீரான் ரஸா கான், ஷாஹார் இமாம் முஃப்தி முகம்மது குர்ஷித் ஆலம் மற்றும் முஃப்தி அப்சல் ரிஸ்வி ஆகியோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
உடனே, உள்ளூர் ஷாஹார் இமாம் முஃப்தி குர்ஷித் ஆலம், நிதா கானுக்கு எதிராக பத்வா வழங்கப்படுவதாக கூறினார். இந்நிலையில், உத்தரப் பிரதேச சிறுபான்மை ஆணைய தலைவர் தன்வீர் ஹைதர் உஸ்மானி நேற்று கூறியுள்ளதாவது:
‘‘நிதா கானுக்கு பத்வா வழங்கியவரை கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் சொத்துக்களை பறிமுதல் செய்யும்படி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் (பரேலி) ஆகியோரை கேட்டுக்கொண்டுள்ளேன். இவ்வழக்கின் முழுவிவரங்கள் அடங்கிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT