Last Updated : 29 Aug, 2018 11:03 AM

 

Published : 29 Aug 2018 11:03 AM
Last Updated : 29 Aug 2018 11:03 AM

காஷ்மீர் என்கவுன்ட்டரில் ஹிஸ்புல் கமாண்டர் உட்பட 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டர் தாக்குதலில் இரண்டு ஹிஸ்புல் முகாஜிதீன் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதை அறிந்த பாதுகாப்புப் படையினர், செவ்வாய்க்கிழமை காலையில், முனிவார்ட் கிராமத்தில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடங்கியதால், பதிலடி தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர்.

இதில் தீவிரவாதி அல்தாஃப் கச்ரு கொல்லப்பட்டார். காவல்துறை அதிகாரிகள் கொலை உட்பட பல்வேறு முக்கியமான சம்பவங்களில் தொடர்புடையவர் அல்தாஃப் ஆவார். தாக்குதலில் மேலும் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். அவரை பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

இதுகுறித்து காஷ்மீர் காவல்துறை கண்காணிப்பாளர் எஸ் பி பனி கூறும்போது, ''கொல்லப்பட்ட தீவிரவாதிகள் இருவரும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x