இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப மாவோயிஸ்ட் தலைவர் அழைப்பு

இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப மாவோயிஸ்ட் தலைவர் அழைப்பு
Updated on
1 min read

கட்​சிரோலி: மாவோ​யிஸ்ட் அமைப்​பில் பொலிட் பீரோ மற்​றும் மத்​தி​யக் குழு உறுப்​பின​ராக இருந்​தவர் வேணுகோ​பால் ராவ் என்ற பூப​தி. இவர் கடந்த மாதம் 14-ம் தேதி போலீ​ஸார் முன் ஆயுதங்​களை ஒப்​படைத்​து​விட்டு சரணடைந்​தார்.

இவருடன் சேர்ந்து ரூபேஷ் என்ற முக்​கி​யத் தலை​வரும் சரணடைந்​தார். இந்​நிலை​யில் தன்​னுடன் இருந்த மாவோ​யிஸ்ட் தோழர்​களுக்கு வீடியோ மூலம் வேண்​டு​கோள் ஒன்றை பூபதி விடுத்​துள்​ளார்.

அதில் அவர், “மாவோ​யிஸ்ட் தோழர்கள் ஆயுதங்​களை ஒப்​படைத்து விட்டு மக்​களு​டன் இணைந்து பணி​யாற்​றும் இயல்பு வாழ்க்​கைக்கு திரும்ப வேண்​டும். அதி​காரம் மற்​றும் நிலப் பகு​திக்​காக நாம் ஆயுதம் ஏந்தி போராடியது, நம்மை மக்​களிடம் இருந்து பிரித்​து​விட்​டது. இது நமது பாதை தவறு என்​பதை காட்​டி​யுள்​ளது. இதனால் மாவோ​யிஸ்ட்​டு​கள் வன்​முறையை கைவிட்டு இயல்பு வாழ்க்​கைக்கு திரும்ப வேண்​டும்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in